வாரணாசியில் இருந்து வந்த ரயிலில் ஆண் சடலம்

வாரணாசியில் இருந்து வந்த ரயிலில்  ஆண் சடலம்

ரயிலில் ஆண் சடலம் 

வாரணாசியில் இருந்து வந்த ரயிலில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வராணாசியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கடந்த 15 ஆம் தேதி வந்த கங்கா காவேரி விரைவு ரயிலை நேற்று காலை 6 மணிக்கு பேசின்பிரிட்ஜ் யார்டில் சுத்தம் செய்த போது, முன்பதிவில்லா பெட்டியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அதன் பையில் வராணாசி முதல் சென்னை வரையிலான ரயில் பயணச்சீட்டு இருந்தது. இது குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story