பிரச்சாரம் சரவெடியாக இருக்கும் : மன்சூர் அலிகான் கலகல பேட்டி!

பிரச்சாரம் சரவெடியாக இருக்கும் : மன்சூர் அலிகான் கலகல பேட்டி!

மன்சூர் அலிகான்

குடியாத்தம் பகுதியில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வேலூர் வெயிலூர் ஆக உள்ளது அதை பசுமையாக கொடைக்கானல் போல் மாற்ற வேண்டும் என்பதற்காகவே வேலூரில் நான் போட்டியிடுகிறேன். பாலாற்றில் தண்ணீர் ஓடுவதற்கு ஏற்பாடு செய்வேன்.அதிமுக கூட்டணியில் வாய்ப்பளித்தால் இட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன், இல்லையென்றால் தனித்து போட்டியிடுவேன். மக்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.என்னை பார்த்து அனைவரும் பயப்படுகிறார்கள் நான் பாராளுமன்றத்தில் கலக்கி விடுவேன் என்றும் யாரையும் பேச விட மாட்டேன் என்றும் பயப்படுகிறார்கள். கூட்டணி வந்தால் சரி. இல்லை என்றால் வேட்டு அணிதான். 30 ஆம் தேதிக்கு மேல் எனது பிரச்சாரம் சரவெடியாக இருக்கும்,என கூறினார்.

Tags

Next Story