திருமணமான  9-ம் வகுப்பு மாணவி காப்பகத்தில் இருந்து  மாயம்

திருமணமான  9-ம் வகுப்பு மாணவி காப்பகத்தில் இருந்து  மாயம்
பைல் படம்

குமரி மாவட்டம் சுசீந்திரம் மேலகிருஷ்ணன் புதூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமியை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் காதலித்து, பெற்றோர் விருப்பத்துடன் கடந்த ஜூலை மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சிறுமிக்கு 18 வயது நிரம்பாமல் திருமணம் நடைபெற்றதாக கூறி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

அப்போது 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் செய்து கொடுத்ததால் திருமணம் செய்து கொண்ட வாலிபர் மற்றும் சிறுமியின் தாயார், வாலிபரின் தந்தை ஆகியோர் மீது கன்னியாகுமரி மகளிர் போலீசில் சமூகநலத்துறை அதிகாரி புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்டனர்.

மீட்கப்பட்ட சிறுமி இருளப்பபுரத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வல்லன் குமாரன் விளையில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுமி மாலையில் காப்பகத்திற்கு திரும்பவில்லை. இதுகுறித்து காப்பக கண்காணிப்பாளர் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

Tags

Next Story