திருச்செந்தூர் கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

திருச்செந்தூர் கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

தேரோட்டம்

திருச்செந்தூர் கோயிலில் மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் காலை காலை கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர் தேரோட்டம் தொடங்கியது.

சுவாமி குமரவிடங்க பெருமான்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய பெரிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ரத வீதிகளைச் சுற்றி வலம் வந்து தேர் மீண்டும் நிலைக்கு வந்தது. இதன் பின்னர் தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் குவிந்துள்ளனர்.

ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags

Next Story