திருச்செந்தூரில் மாசி திருவிழா: சுவாமி அம்பாள் வீதி உலா!

திருச்செந்தூரில் மாசி திருவிழா: சுவாமி அம்பாள் வீதி உலா!

 மாசி திருவிழா

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா 2ஆம் நாளான இன்று சுவாமி அம்பாள் திரு வீதி உலா நடந்தது.
முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா 14ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. திருவிழாவின் 2ஆம் நாளான நாள் இரவு ஆழ்வார்திருநகரி தாசில் ஆண்டியப்பபிள்ளை மண்டபத்திலிருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும் தெய்வானை அம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வருகின்ற பிப்.23 ஆம் தேதி பத்தாம் திருவிழா அன்று திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story