திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா தொடக்கம்

திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா தொடங்கியது.

முருனனின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியம் சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா இன்று காலை 5.30 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசித்திருவிழாயொட்டி இன்று அதிகாலை மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பச்சைப்பட்டு, தங்க கவசம், வேல், பச்சைகள் முத்து, அணிவித்து தீபாராதணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர். இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற உள்ள மாசித் திருவிழாவில் உற்சவர் கடவுள் தினமும் காலை மாலை நேரங்களில் வெள்ளி சூரிய பிரபை வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், புலி வாகனம், ஆட்டுக்கிடாய் வாகனம், பூத வாகனம், என்று பல்வேறு வாகன சேவைகளில் முருகப்பெருமான், வள்ளி, தேவயானி தாயாருடன் எழுந்தருளி மலைக் கோயில் ராஜ வீதிகளில் உலா நடைபெறும்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளான வரும் 21ஆம் தேதி திருத்தேர் வீதி உலா, 23ஆம் தேதி அதிகாலை வள்ளி திருமணம் வெகு விமர்சியாக நடைபெறும். பக்தர்கள் அதிக அளவில் முருகன் கோயிலுக்கு வருவார்கள்ள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Tags

Next Story