சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - மெக்கானிக் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - மெக்கானிக் போக்சோவில் கைது

கைது

பேரணாம்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த மெக்கானிக் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த சிவனகிரி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (30). இரு சக்கர வாகன மெக்கானிக். இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. இவர் 4-ம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுமியை நேற்று காலை அங்குள்ள புதர் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளாள். இதனை கேட்ட அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிறுமியை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறாள்.

இதுகுறித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி ரமேசை பிடித்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி இது போக்சோ சட்டத்தில் ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags

Next Story