எம் ஜி ஆர் பிறந்தநாள் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

எம் ஜி ஆர் பிறந்தநாள் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய இணையமைச்சர் எல் முருகன் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"இவர் போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த பொன்மனச் செம்மல், எம்.ஜி.ஆர்.” தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்தவர். ஆறு முதல் அறுபது வயதான அத்தனை மக்களின் அன்புக்கும் பாத்தியப்பட்டவர். "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற அவரது பாடல் போல இன்னும் மக்கள் மனதில் ஆழமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தலைவர். எளிய மக்கள் அனைவராலும் “புரட்சித் தலைவர்” என்று அன்போடு அழைக்கப்பட்டவர், அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, மக்கள் நலனுக்காக பணி செய்தவர். தமிழக முன்னாள் முதல்வர், பாரத ரத்னா, தெய்வத்திரு டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரைப் போற்றி வணங்குவோம்!

Tags

Next Story