அமைச்சர் எ.வ.வேலு - 5 வது நாளாகத் தொடரும் வருமானவரி சோதனை

அமைச்சர் எ.வ.வேலு - 5 வது நாளாகத் தொடரும் வருமானவரி சோதனை

வருமான வரித்துறையினர் சோதனை 

சென்னை,திருவண்ணாமலை,கோவை உட்பட பல்வேறு இடங்களில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த சோதனை ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கோவை ராமநாதபுரத்தில் உள்ள திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் இல்லம், அவரது மகன் ஸ்ரீராமின் பீளமேடு அலுவலகம்,சௌரிபாளையம் காசா கிரான்ட் அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி் வருகின்றனர்.நேற்று மாலை மீனா ஜெயக்குமாரின் இல்லத்தில் நடைபெற்று வரும் பணிகளை கோவை வருமான வரித்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் நேரடியாக பார்வையிட்டு சென்றார்.இந்நிலையில் தொடர்ந்து 3 இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகின்றது. காசா கிராண்ட் அலுவலகம்,காசா கிராண்ட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் இல்லம்,மீனா ஜெயக்குமார் இல்லம் ஆகிய இடங்களில் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story