அமைச்சர் கே.என்.நேரு மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டார்

அமைச்சர் கே.என்.நேரு மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டார்

அமைச்சர் கே.என்.நேரு மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டார்

கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்டமாக நடக்கிறது. மாநாட்டு மேடை, பந்தல், முகப்பு பகுதி என பணிகள் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்த மாநாட்டு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தினமும் பார்வையிட்டு வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேரு அடிக்கடி மாநாட்டு பணிகளையும், அதனை நடத்துவது தொடர்பாகவும் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். அந்த வகையில் நேற்று அமைச்சர் கே.என்.நேரு மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது பந்தல் அமைப்பாளர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். கட்சி நிர்வாகிகளிடமும் ஆலோசனை வழங்கினார். மேலும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு மேடைக்கு வரும் பாதை, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அமரும் இடம், கட்சி நிர்வாகிகள் உணவு அருந்தும் இடம், பெரியார், அண்ணா, கருணாநிதி உருவ சிலைகள் அமைக்கும் இடங்களையும் பார்வையிட்டார். அப்போது மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் கருணாநிதி, துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story