போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சைதாப்பேட்டை 5 விளக்கு பகுதியில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் இன்று (03.03.2024) கோடம்பாக்கம் மண்டலம், சைதாப்பேட்டை 5 விளக்கு பகுதியில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ் குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) ஜெயச்சந்திர பானு ரெட்டி, மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன் குமார், மண்டல குழு தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, இரா துரைராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் மற்றும் ஊரகப் பணிகள் இயக்குநர் மரு. இளங்கோ மகேஸ்வரன், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், உலக சுகாதார நிறுவன அமைப்பின் உறுப்பினர்கள் சுரேந்திரன், ஆஷா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story