சென்னை ஐந்து பர்லாங் சாலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு

சென்னை ஐந்து பர்லாங் சாலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு

ஆய்வு செய்த அமைச்சர் 

சென்னை ஐந்து பர்லாங் சாலையில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பள்ளத்தினை சீர்படுத்துவது குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், மடுவின்கரை, ஐந்து பர்லாங் சாலையில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பள்ளத்தினை சீர்படுத்துவது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் செ.சரவணன், மண்டலக்குழுத் தலைவர் திரு.ஆர்.துரைராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்

Tags

Next Story