பதிவுத்துறையில் பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் மூர்த்தி

பதிவுத்துறையில் பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் மூர்த்தி

பணி நியமன ஆணைகள் வழங்கல்

வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பணியாற்றி உயிரிழந்த ஏழு பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமையில் இன்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக வளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் (ம) தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர் / தனித்துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின்போது பதிவுத்துறையில் பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகள் 7 நபர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச் செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story