இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

அமைச்சர் ரகுபதி 

சட்டசபையில் தனது எந்த உரைக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

சட்டசபையில் தான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சரின் உரையில் பதில் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக சட்ட அமைச்சர் ரகுபதி, "முதல்வரின் பதிலையை கவனித்திருந்தால் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கான உத்தி எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிந்திருக்கும். சென்னை தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் டிசம்பரில் ஏற்பட்டது என்றும், ஒரு மாதத்திற்குள்ளாகவே செலவு விவரங்களை எப்படி பெற முடியும்" என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags

Next Story