பொறியாளர்களுக்கு 13 புதிய வாகனங்களை அமைச்சர் வழங்கல்

சேப்பாக்கம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில், களப்பணிக்காக மேற்பார்வைப் பொறியாளர்களுக்கு 13 புதிய வாகனங்களை அமைச்சர் வழங்கினார்

இன்று (24.01.2024) நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு , சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில், ரூபாய் 1.35 கோடி மதிப்பில், களப்பணிக்காக மேற்பார்வைப் பொறியாளர்களுக்கு 13 புதிய வாகனங்களை (Bolero Jeep) வழங்கினார்.

இந்நிகழ்வில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, இணை மேலாண்மை இயக்குநர் வெ.சரவணன், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story