நிவாரண உதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 ஆகிய இரு தினங்களில் பெய்த கன மழை காரணமாக மாவட்டத்தில் கிராமங்கள் மற்றும் மாநகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பல பகுதிகளில் மழை வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர் வீடுகள் இடிந்து சேதமடைந்தனர். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மழை வெள்ளத்தில் உயிரிழந்த 22 பேர் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரண உதவியும் மழையினால் இடிந்த வீடுகளுக்கு 16 பேருக்கு தலா பத்தாயிரம் நிவாரண உதவி தொகை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் மூர்த்தி, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story