சொந்த தொகுதியில் நடந்த அரசு விழாவில் எம்.எல்.ஏ., புறக்கணிப்பு: ஆதரவாளர்கள் அதிர்ச்சி

சொந்த தொகுதியில் நடந்த அரசு விழாவில் எம்.எல்.ஏ., புறக்கணிப்பு: ஆதரவாளர்கள் அதிர்ச்சி

சொந்த தொகுதியில் எம்.எல்.ஏ.,வை புறக்கணித்து அரசு விழா நடந்ததால் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். 

சொந்த தொகுதியில் எம்.எல்.ஏ.,வை புறக்கணித்து அரசு விழா நடந்ததால் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த விழாவிற்கு மானாமதுரை தொகுதி எம்எல்ஏ தமிழரசிக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்கப்படாததால் இந்த விழாவை புறக்கணித்தார். இதுகுறித்து தமிழரசி எம்எல்ஏவிடம் கேட்டபோது எனக்கு முறையாக இந்த விழாவிற்கு அழைப்பு அனுப்பாததால் நான் அருப்புக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என கூறினார். சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பனுக்கும், தமிழரசிக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருவது இந்த நிகழ்ச்சியின் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

Tags

Next Story