கலைமகள் தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் எம்எல்ஏ பங்கேற்பு!

கலைமகள் தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் எம்எல்ஏ பங்கேற்பு!

ஆற்காடு அருகே நடந்த கலைமகள் தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற ரவி எம்எல்ஏவுக்கு பள்ளி நிர்வாகம் நினைவு பரிசு வழங்கியது.


ஆற்காடு அருகே நடந்த கலைமகள் தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற ரவி எம்எல்ஏவுக்கு பள்ளி நிர்வாகம் நினைவு பரிசு வழங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ஆயிலம் பகுதியில் உள்ள கலைமகள் தொடக்கப்பள்ளியில் 38-வது ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு அ.கோ.அண்ணாமலை தலைமை தாங்கினார். தாழனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாரதி என்ற ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.பள்ளி முதல்வர் விஜயலட்சுமி வரவேற்றார். ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார், கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு பள்ளியின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் வாலாஜா நகரமன்ற முன்னாள் தலைவர் வேதகிரி, ஆற்காடு ஆர்.ராஜா, சுந்தர் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story