மாடியிலிருந்து தவறி விழுந்த தாய் பலி - மகள் திருமணம் நாளை நடக்கவிருந்த நிலையில் சோகம்

மாடியிலிருந்து தவறி விழுந்த தாய் பலி - மகள் திருமணம் நாளை நடக்கவிருந்த நிலையில் சோகம்

ஜெகதா

நாகர்கோவில் அருகே மகள் திருமணம் நாளை நடக்கவிருந்த நிலையில் தாய் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அருகே அகஸ்தீஸ்வரம் மேலதெருவை சேர்ந்தவர் ஜெகதா (58). இவர் கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் துணிகளை வீட்டின் மொட்ட மாடியில் காயபோடும்போது தன்னைத்தானே நிலைதடுமாறி மேலே இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ராதாகிருஷ்ணன் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதா உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெகதாவின் மகளுக்கு நாளை திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்துபார்த்து செய்து வந்த நிலையில் திடீரென அவர் உயிழந்தது அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.




Tags

Next Story