வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்ட கனிமொழி எம்.பி

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்ட கனிமொழி எம்.பி

கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிய கனிமொழி 

வெள்ளப் பாதிப்பில் சிக்கிய‌ கர்ப்பிணியை கனிமொழி எம்.பி நேரில் சென்று வாகனம் மூலம் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.

தென் தமிழகத்தை உலுக்கிய கனமழையில் தூத்துக்குடி மாவட்டம் அதிக அளவு பாதிப்பை சந்தித்ததுள்ளது. இந்நிலையில் கனிமொழி கருணாநிதியின் உதவி எண்ணிற்கு கர்ப்பிணிப் பெண் ஒருவரை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி புஷ்பா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று கர்ப்பிணி பெண்மணியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். கர்ப்பிணி பெண்மணியை வாகனத்தில் ஏற்ற உதவி செய்த கனிமொழி, அவரும் அதே வாகனத்தில் மருத்துவமனை வரை உடன் சென்றார். கர்ப்பிணி பெண்மணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கனிமொழி கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story