சேலத்தில் ஏழை மக்களுக்கு இலவச உணவு மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார்

சேலத்தில் ஏழை மக்களுக்கு இலவச உணவு மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார்

சேலத்தில் ஏழை மக்களுக்கு இலவச உணவு மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார்

200க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
சேலம் சுகவனேசுவரர் கோவில் அருகே பாரதி உரிமைகள் அறக்கட்டளை சார்பில் உண்டி கொடுப்போம் என்ற திட்டத்தின் கீழ் தினமும் ஏழை, எளிய மக்களுக்கு காலையில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியின் 500-வது நாளை முன்னிட்டு சிறப்பு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் பூபதி தலைமை தாங்கினார். சரவணமூர்த்தி, கோபிநாத், ரோட்டரி செல்வம், பாஸ்கரன், ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரபஞ்சம் சேவாஸ்ரம தலைவர் ஷிவாத்மா சிறப்பு பிரார்த்தனை செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவுகளை வழங்கினார். தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வக்கீல் சிவநேசன், மணி, ஆடிட்டர் செந்தில், சாகுல் ஹமீது, பார்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story