தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ் நியமனம்

தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ் நியமனம்

முருகானந்தம் ஐ.ஏ.எஸ் 

தமிழ்நாட்டு அரசின் தலைமை செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா மாற்றப்பட்ட நிலையில், புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக அரசின், 49வது தலைமை செயலராக சிவ்தாஸ் மீனா, கடந்த ஆண்டு ஜூன் 30ல் பொறுப்பேற்றார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த, கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்று நன்றி உரையாற்றினார்.

விழா முடிந்த சில மணி நேரத்தில் அவர், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்படுவதாக அரசாணை வெளியானது. இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 19) புதிய தலைமை செயலராக, முதல்வரின் செயலராக உள்ள முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.

இவர் முதல்வரின் முதன்மை செயலராக இருந்துள்ளார். முருகானந்தம் ஐ.ஏ.எஸ்., 1991 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. முதுநிலை கணினி அறிவியல் பட்டதாரி; ஐ.ஐ.எம்., லக்னோவில் எம்.பி.ஏ., படித்துள்ளார்.

பல்வேறு துறைகளில் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் முருகானந்தத்திற்கு உள்ளது. பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்த போது, அவருக்கு கீழ் முகானந்தம் செயலாளராக பணியாற்றினார். இவர் கோவை மாவட்ட கலெக்டராகவும் இருந்தவர்.

Tags

Next Story