நாகை எம்.பி செல்வராஜ் மறைவு - கமலஹாசன் இரங்கல்

நாகை எம்.பி செல்வராஜ் மறைவு - கமலஹாசன் இரங்கல்

எம்.செல்வராஜ்

நாகை மக்களவை உறுப்பினர் எம்.செல்வராஜ் மறைவிற்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான தோழர் எம். செல்வராஜ் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாக மக்கள் பணி செய்துவந்த தோழரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags

Next Story