நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திருக்குட நன்னீராட்டு - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்  திருக்குட நன்னீராட்டு - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் ஆஞ்சநேயர் 

13 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் என்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலானது. நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது. மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த வெளிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் சிலையானது ஒரே கல்லில் 18 அடி உயரம் கொண்டுள்ளது. இரு கைகளை கும்பிட்டவாரு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தமிழக முழுவதும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரின் அருளை பெற்று செல்கின்றனர். நாமக்கல் ஆஞ்சநேயரை பொறுத்தவரைக்கும் காற்று,மழை , வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். கடந்த 2009 ம் ஆண்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடத்தப்பட்டது, தற்போது 13ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழாவானது வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. இந்த திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி கடந்த 30 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வேள்வி அமைக்கப்பட்டு கும்ப பூஜை தொடங்கப்பட்டன, தொடர்ந்து 31 ம் தேதி காலை அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி பட்டாச்சாரியர்கள் தமிழ் முறைப்படி ஆஞ்சநேயரின் உற்சவர் சிலைக்கு புனித நீர் ஊற்றி திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை வெகு விமரிசையாக நடத்தினர். முன்னதாக காலை 7 மணிக்கு அனுதின ஹோமம், தாரா ஹோமம் நடைபெற்றன. திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி காலை 11:45 மணிக்கு சர்வ தரிசனம் நடைபெற உள்ளது. இந்த திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன், எம்.பிக்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ,ஈஸ்வரன் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் உமா உள்ளாட்சி பிரதிகள் என ஏராளமான கலந்து கொண்டனர், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக இந்தப் பெருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்காக எஸ் பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் 800 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆஞ்சநேயர் திருக்கூட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி நாமக்கல் தாலுக்கா முழுவதும் இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அதேபோல போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story