மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

170 மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவச்சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில்உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு மருத்துவர் பரணிதரன், காது மூக்கு, தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, மனநல மருத்துவர் புஷ்பா நந்தினி, கண் மருத்துவர் காயத்திரி, பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் சக்திவேல் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தனர். முகாமில் 170 மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவச்சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Tags

Next Story