நெல்லை ஜெயக்குமார் சம்பவம் - கே.வி.தங்கபாலு ஓபன் டாக் !

நெல்லை ஜெயக்குமார் சம்பவம் - கே.வி.தங்கபாலு ஓபன் டாக்  !

கே.வி.தங்கபாலு

காங்கிரஸ் தலைவர் நெல்லை ஜெயக்குமார் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சடலமாக மீட்கப்பட்டார். அதற்கு முன்பாகவே அவர் அளித்திருந்த கடிதத்தில் மரண வாக்குமூலம் எனக் குறிப்பிட்டு, நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன், முன்னாள் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு உட்பட ஆறு பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு தனக்கு ஏதாவது நேரிட்டால் இவர்கள் தான் காரணம் என எழுதியிருந்தார்.

இதனையடுத்து, இன்று முன்னாள் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ''என்னை பற்றி வெளி வரும் செய்திகள் அனைத்தும் தவறானது. என்னுடைய 50 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் காங்கிரஸ் கட்சிக்காரர்களிடம் ஒரு பைசா கூட வாங்கியதில்லை . வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. காவல்துறை கேட்ட அனைத்து கேள்விக்கும் விளக்கம் அளித்துள்ளேன். விசாரணை சரியான முறையில் நடைபெற்றது. எப்போது விசாரணை என்றாலும் முழு ஒத்துழைப்போடு கலந்து கொள்வேன்.'' என தெரிவித்தார்.


Tags

Read MoreRead Less
Next Story