சத்தியமங்கலம் அருகே தீக்குளித்த புதுப்பெண் சாவு:ஆர்டிஓ விசாரணை

சத்தியமங்கலம் அருகே தீக்குளித்த புதுப்பெண் சாவு:ஆர்டிஓ விசாரணை

கோப்பு படம் 

சத்தியமங்கலம் அருகே தீக்குளித்த புதுப்பெண் இறப்பு குறித்து, கோபி ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் தவமணி வயது 19 அதே பகுதி சேர்ந்த சுரேஷ் வயது 27 இருவருக்கும் தவமணிக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தவமணி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார் மேலும் அவர் உடலுறவு குறைவால் அவதிப்பட்டு வந்ததா கூறப்படுகிறது இதற்காக சிகிச்சை பெற்று நோய் குணமாகவில்லை,

இதனால் மனமுடைந்து காணப்பட்ட இந்த நிலையில் பெரிய ஒரு தனது பாட்டி வீட்டுக்கு சென்று தவமணி கடந்து 21ஆம் தேதி இரவு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

இதில் உடல் கருகிய நிலையில் அலறி துடித்த அவளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி தவமணி நேற்று முன்தினம் உயிரிழந்தார் இது குறித்து சத்தியமங்கலம் போலீசை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தவமணிக்கு திருமணம் நடந்து நாலு மாதங்கள் ஆவதால் கோபி ஆர்டிஓ கண்ணப்பன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்

Tags

Next Story