அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு விநியோகம் - தமிழ்நாடு அரசு

அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு விநியோகம் -  தமிழ்நாடு அரசு

புதிய ரேஷன் கார்டு

அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் மாதம் மாதம் பெண்கள் வாங்கும் மகளிர் உரிமை தொகை வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுவரை புதிய ரேஷன் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

எனவே அடுத்த மாதம் முதல் புதிய அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அட்டைகளில் ஏதேனும் பிழைகள் இருந்தாலும், மாற்றம் செய்ய நினைத்தாலும் அல்லது புதிய அட்டை பெற விரும்பினாலும் www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story