துணை முதலமைச்சர் பதவி தொடர்பான செய்திகள் வெறும் வதந்திகளே - உதயநிதி ஸ்டாலின்!

துணை முதலமைச்சர் பதவி தொடர்பான செய்திகள் வெறும் வதந்திகளே - உதயநிதி ஸ்டாலின்!

 உதயநிதி ஸ்டாலின்

தாம் துணை முதலமைச்சராகப் போவதாக வரும் செய்திகள் வெறும் வதந்தியே என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இளைஞரணியின் 45 ஆண்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ``கழகத்தில் பல அணிகள் இருந்தாலும், அதில் முதல் அணி இளைஞரணி. இந்த இளைஞரணிக்கு பிராண்ட் அம்பாசிட்டர் கழக தலைவர்தான். இன்று அவர் இவ்வளவு பெரிய பொறுப்புக்கு வந்ததற்கு இளைஞரணிதான் அடித்தளம் அமைத்தது. " என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசியஇளைஞரணிசெயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தாம் துணை முதலமைச்சராகப் போவதாக வரும் செய்திகள் வதந்தி என்றும், இதனை நம்பி இப்போதே சிலர் துண்டு போட்டு வைக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்போம் என்றும், திமுக அமைப்பாளர்கள் அனைவரும் முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்போம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும், தனது மனதிற்கு மிக மிக நெருக்கமான ஒரு பொறுப்பு என்றால் அது இளைஞரணி செயலாளர் பொறுப்பு தான் எனவும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Tags

Next Story