கடலூரில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூரில்  முதலாம்  எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூரில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி காரணமாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதே போல் சென்னை, தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story