துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை

துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை
புயல் எச்சரிக்கை கூண்டு 
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ரெமல் புயலாக இன்று உருவாகிறது. எனவே, இது குறித்து மீனவர்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

புயல் எச்சரிக்கை காரணமாக மே 26-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Tags

Next Story