எந்த உயரத்தில் இருந்தாலும் சாமானிய மனிதன் விஜயகாந்த் - கனிமொழி எம்பி

எந்த உயரத்தில் இருந்தாலும் சாமானிய மனிதன் விஜயகாந்த் - கனிமொழி எம்பி

கனிமொழி எம்பி

எந்த உயரத்தில் இருந்தாலும் தான் சாமானிய மனிதன் என்பதை எந்த காலகட்டத்திலும் மறந்திடாத மாமனிதர் விஜயகாந்த் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி கூறியதாவது.

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் மறைவு என்பது தமிழக அரசியலுக்கு மட்டுமில்லாமல் அவரைத் தெரிந்த எல்லோருக்கும் மிகப்பெரிய இழப்பு எந்த உயரத்தில் இருந்தாலும் தான் சாமானிய மனிதன் என்பதை எந்த காலகட்டத்திலும் மறந்திடாத மாமனிதர் அவர், எப்பொழுதும் மக்கள் மீதும் எளியவர்கள் மீதும் அக்கறை கொண்டவர்.

ஒரு காலகட்டத்தில் உதவியவர்களை மறக்காமல் அவர்களோடு என்று இருக்கக்கூடியவர் தான் புரட்சி கலைஞர் விஜயகாந்த், அவரது அரசியல் பயணம் என்பது கூட மக்கள் மீது இருக்கக்கூடிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் கூட தமிழ் உணர்வு, திராவிட உணர்வு மக்கள் மீது வைத்திருக்கக் கூடிய அன்பு இதைச் சுற்றித்தான் அவரது திரைப்படமும் இதையே மைய கருத்தாக கொண்டு இருந்தது என்றார்.

அவருடைய வாழ்க்கையும் தமிழ் இனம் என்பதைத்தான் பற்றி கொண்டு இருந்தது அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர், அவரை நாம் இன்று இழந்து இருக்கிறோம். அவரோடு பழகக் கூடிய வாய்ப்பு எங்கள் குடும்பத்தாரோடு பல சந்தர்ப்பங்களில் இருந்திருக்கிறது என்றார். தலைவர் மீதும் எனது தாயார் மீதும் பற்று வைத்திருக்க கூடிய நல்ல மனிதர் அவர், அவருடைய இழப்பு என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய இழப்பாகும், வேலை தேடி வரக்கூடிய யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் தன்னுடைய அலுவலகத்திலேயே 75 பேருக்கு ஒரு நிமிடத்தில் வேலை கொடுக்கக்கூடிய அவ்வளவு இளகிய மனதிற்கு சொந்தக்காரர் அவர், அவரது இழப்பு என்பது அவரை தெரிந்தவர்கள் அனைவருக்கும் நேரடியாக தான் இருக்கும் என்றார்.

Tags

Next Story