ராமர் மீதான நம்பிக்கையை எந்த ஆட்சியாலும் மாற்ற முடியாது- வானதி

சனதான தர்மம் மீண்டும் ஒரு முறை தனது சக்தியை நிலைநாட்டி உள்ளது. ராமர் மீதான நம்பிக்கையை ஒருபோதும் எந்த ஆட்சியாலும் மாற்ற முடியாது. நாங்கள் திமுகவினரை பயப்பட சொல்லவில்லை என்றவர் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்துள்ளவர்கள் சிறைக்கு செல்கிறார்கள் அவ்வளவு தான் என எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை:ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆர்.எஸ். புரம் அருகேயுள்ள ஸ்ரீ ராமர் பஜனை திருக்கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.மேலும் கோவில் முன்பு சாலையோரத்தில் ஒரு வாகனத்தில் இருந்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேரலை எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பப்பட்டது.இதில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.அப்போது அனுமதியின்றி சாலையோரத்தில் வாகனத்தில் இருந்து நேரலை காட்சிகளை ஒளிபரப்ப காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் “இந்திய நாட்டின் மிகப்பெரிய வரலாற்று கலாச்சார சிறப்புமிக்க நாள் எனவும் 540 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் அயோத்தியில் எழுந்தருளி இருப்பதாக கூறியவர் இதற்காக பல லட்சம் பேர் போராட்டம் செய்து தங்களது உயிரை கொடுத்துள்ளனர் என்றார். இந்த நாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து இருந்தனர் எனவும் ஆக்கிரமிப்பாளர்கள் இந்து மதத்தை அழிக்க வழிபாட்டு தலங்களை சீரழிக்க முயற்சி செய்து அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு, சனதான தர்மம் மீண்டும் ஒரு முறை தனது சக்தியை நிலைநாட்டிய உள்ளது என்றார்.

ராமர் கோவில் உருவாக வாழ்வையும் உயிரையும் தியாகம் செய்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துப்கொள்வதாக கூறிய அவர் ராமர் கோவில் கும்பாபிஷேகம் பிரதமர் மோடி முன்னிலையில் சிறப்பாக நடந்துள்ளது எனவும் ராமர் கோவில் இந்திய தேசிய கலாச்சாரத்தின் அடையாளம் என்றார். காந்தியின் கனவான ராம ராஜ்ஜியம் நோக்கி நாட்டை பிரதமர் மோடி எடுத்து சென்று கொண்டுள்ளார் என்றவர் ராமர் கோவில் உரிமையை உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் இந்துக்கள் பொறுமையாக,சட்ட ரீதியாக உரிமையை பெற்றுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.கோவில் கட்ட அரசு செலவழிக்காமல் மக்கள் நன்கொடை மூலம் கோவில் கட்டப்பட்டுள்ளது என்றார்.

சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்பது போல தமிழக அரசு செயல்படுகிறது எனவும் கோவில்களில் சிறப்பு பூஜை,அன்னதானம் நடத்த அரசு அனுமதி மறுப்பதாகவும் நாட்டில் விரும்பும் தெய்வத்தை வழிபட அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை நிகழ்வை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என்றார்.அத்தனை மக்களையும் அரவணைப்பு தான் ராம் ராஜ்ஜியம் என்றவர் மக்களின் பக்தி உணர்வை அடக்க நினைத்தால் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் மக்களின் பக்தி உணர்வை திராவிட மாடல் அரசால் நிறுத்தி விட முடியாது என்றார்.

தமிழகம் ராமர் உடன் தொடர்புடைய மாநிலம் எனவும் மோடிக்கு கிடைத்து வரும் அன்பு ஆதரவை பார்க்க சகிக்காமல் அரசு முடக்க நினைக்கிறது என்றவர் பாஜக மக்களின் உணர்வுகளோடு நிற்பதாக கூறினார்.கோவையில் நேரலையை ஒளிபரப்ப கூடாது என காவல் துறையினர் கோவில் நிர்வாகத்தை மிரட்டுகிறார்கள் எனவும் காவல் துறை அதிகாரி ஒருமையில் பேசி மிரட்டுவதாக குற்றம் சாட்டியவர் ராம நாமம் திமுகவிற்கு தக்க பதிலடி தரும் எனவும் காவல் துறையினர் வழக்கு போட்டால் அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் நீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.

திராவிட மாடல் இந்துக்களுக்கு எதிரான மாடல் என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்றவர் கோவில்களில் சிறப்பு பூஜை உள்ளிட்டவை செய்யக்கூடாது என அரசு வாய்மொழி உத்தரவு போட்டுள்ளது எனவும் ராமர் கோவில் குறித்து ஒரு சில மடாதிபதி தங்களது சொந்த கருத்துகளை கூறியுள்ளர் என்றார். தமிழக அரசு மக்களின் உணர்வை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றவர் பக்தர்கள் அயோத்தி செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றவர் 500 வருடத்திற்கு பிறகு ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது 500 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். இல்லை பாஜக இல்லை. இதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.ராமர் மீதான நம்பிக்கையை ஒருபோதும் எந்த ஆட்சியாலும் மாற்ற முடியாது எனவும் நாங்கள் திமுகவினரை பயப்பட சொல்லவில்லை என்றவர் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்துள்ளவர்கள் சிறைக்கு செல்கிறார்கள் அவ்வளவு தான் எனத் தெரிவித்தார்.

Tags

Next Story