சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் அவர் கேப்டன் - பிரதமர் மோடி

சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் அவர் கேப்டன் -  பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி 

விஜயகாந்த், அரசியலில் எப்போதும் தேச நலனுக்கு முக்கியத்துவம் அளித்தார் என விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தினார்.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடம் உள்ளிட்ட ரூ. 19,850 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், சமீபத்தில் பெய்த மழை, 2023 டிசம்பரில் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்புகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலையைக் கண்டு மிகவும் மனவேதனை அடைந்ததாகக் கூறினார்.

இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழக மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கிறது. மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம் என மோடி கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில், சில நாட்களுக்கு முன்பு மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் சினிமா, அரசியல் என இரண்டிலும் ‘கேப்டன்’ என்று புகழ்ந்தார். ஒரு தலைவராக, அரசியலில், விஜயகாந்த் எப்போதும் தேச நலனுக்கு முக்கியத்துவம் அளித்தார், என பிரதமர் புகழஞ்சலி செலுத்தினார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Tags

Next Story