நாம் தமிழர் கட்சியின் 40 தொகுதிகளிலும் வேட்பாளர் மனுக்கள் ஏற்பு

நாம் தமிழர் கட்சியின் 40 தொகுதிகளிலும் வேட்பாளர் மனுக்கள் ஏற்பு. விளாங்கோடு இடைத்தேர்தல் வேட்பு மனுவும் ஏற்பு.
நாம் தமிழர் கட்சி 40 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிடக்கூடிய நிலையில் இன்று 40 தொகுதிகளிலும் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இந்த வேட்பு மனு பரிசீலனையில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரி 1 தொகுதி என மொத்தம் 40 தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விளாங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அந்தத் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story