கள்ளகுறிச்சி: குழந்தை தொழிலாளர் குறித்து ஆய்வு

கள்ளகுறிச்சி: குழந்தை தொழிலாளர் குறித்து ஆய்வு

குழந்தை தொழிலாளர் குறித்து ஆய்வு செய்த போது 

வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் வேலை செய்கிறார்களா என் ஆய்வு செய்தனர்

குழந்தை தொழிலாளர்களை ஒழிக்கவும், அவ்வாறு பணி செய்யும் குழந்தைகளை மீட்டு மீண்டும் அவர்களுக்கு படிப்பை தொடரும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கள்ளகுறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணி புரிகின்றனரா என ஆய்வு செய்தனர்.

மாவட்ட குழந்தை தொழிலாளர் ஒழிப்பு‌ உதவி ஆய்வாளர் சிவக்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வளர்மதி, மாவட்ட கல்வி அலுவலக பள்ளி துணை ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் காவல்துறையினர் உதவியுடன் நேற்று கடைகளில் ஆய்வு‌ செய்து, குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என எச்சரித்தனர்.

Tags

Next Story