பஞ்சு மிட்டாய் விவகாரத்தில் அதிகாரிகள் ஆய்வு - மா.சுப்பிரமணியன்

பஞ்சு மிட்டாய் விவகாரத்தில் அதிகாரிகள் ஆய்வு -  மா.சுப்பிரமணியன்

 அமைச்சர் மா. சுப்பிரமணியன் 

பஞ்சு மிட்டாய் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.விசாரித்து அறிக்கை அளித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும், என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் ,"பஞ்சு மிட்டாய் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சுற்றுலா மையங்களில் பஞ்சுமிட்டாய் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய கூறியுள்ளேன். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பஞ்சுமிட்டாய்களை ஆய்வு செய்து விசாரித்து அறிக்கை அளித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என தெரிவித்தார்.

Tags

Next Story