ஆம்னி பேருந்து மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்து

ஆம்னி பேருந்து மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்து

விபத்து

ஆறுமுகநேரி அருகே ஆம்னி பேருந்து மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உட்பட 5பேர் காயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் சாலையில் நேற்று ஆம்னி பேருந்தும், ஆட்டோவும் திருச்செந்தூா் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. சீனந்தோப்பு விலக்கு அருகே ஆம்னி பேருந்து பயணிகள் ஆட்டோவை முந்தி சென்றபோது பேருந்தின் பின்பக்கம் உரசியதில் ஆட்டோ சாலையின் கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுநா் வடக்கு ஆத்தூா் பரதா் தெருவை சோ்ந்த சேவியா் மகன் சாந்தகுருஸ் (53), மற்றும் அதில் பயணம் செய்த ஆத்தூா் கீழரதவீதியை சோ்ந்த 4 பெண்களும் காயம் அடைந்தனா். காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆட்டோ ஓட்டுநா் சாந்தகுருஸ் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story