பாதுகாப்பு குறைபாடுகளுடனும் இருக்கும் 18 கிளைச் சிறைகளை மூட உத்தரவு!

பாதுகாப்பு குறைபாடுகளுடனும் இருக்கும் 18 கிளைச் சிறைகளை மூட உத்தரவு!

 ஏடிஜிபி மகேஷ்வர் தயாள்

தமிழகத்தில் 18 கிளைசிறைகளை மூட தமிழக சிறை அதிகாரி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள சிறைகளில் பழுதடைந்த நிலையிலும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும், பாதுகாப்பு குறைபாடுகளுடனும் இருக்கும் சிறைகளை மூட உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மதுராந்தகம், திருத்தணி, ஆரணி, போளூர், செய்யாறு, கீரனூர், மேட்டுப்பாளையம், ராசிபுரம், பரங்கிப்பேட்டை, பரமத்திவேலூர், மணப்பாறை, முசிறி, திருமயம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட 18 கிளைச் சிறைகளை மூட முடிவு.

இந்த கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை மாவட்ட சிறைகளுக்கு மாற்றவும் சிறைத்துறை ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.


Tags

Next Story