பழனி : சர்ச்சையில் சிக்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

பழனி முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடையுள்ள நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை செல்போன் பயன்படுத்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. என்ன நடந்தது?பழனி பாலதண்டாயுதபாணி கோவிலில் சாமி கும்பிட்டார் அண்ணாமலை. பிறகு போகர் சித்தர் சன்னிதிக்கு சென்று வணங்கினார். அங்கிருந்து, ரோப் கார் வழியாகவே அடிவாரத்திற்கு இறங்கினார்..பழநி கோயிலுக்கு சென்ற அண்ணாமலை, தடையை மீறி செல்போன் கொண்டு வந்தாராம். அதுவும் இல்லாமல், ரோப்கார் நிலையத்திலேயே செல்போனில் பேசியிருக்கிறார். அவர் செல்போன் பேசியதையும் யாரோ வீடியோ எடுத்துவிட்டார்கள்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், " அண்ணாமலைக்கு ஒரு நியாயம்? பக்தர்களுக்கு ஒரு நியாயமா? என்று கேள்விகளை கேட்க துவங்கியிருக்கிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story