சுயம்பு சின்னம்மா ஓம் சக்தி கோவிலில் பால்குட ஊர்வலம்

சுயம்பு சின்னம்மா ஓம் சக்தி கோவிலில்  பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்

ராணிப்பேட்டை மாவட்டம், கட்டாரிக்குப்பம் ஓம்சக்தி கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைப்பெற்ற பால்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த கட்டாரிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு சின்னம்மா ஓம்சக்தி கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 1,008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக காலையில் சுயம்பு சின்னம்மா ஓம்சக்தி சுவாமிக்கு நறுமண திரவியம் கொண்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

பம்பை, உடுக்கை, மேளதாளங்கள் முழங்க 1,008 பால் குட ஊர்வலம் முனீஸ்வரன் கோவிலில் இருந்து தொடங்கி கிருஷ்ணர் கோவில், கிராம தேவதை கோவில் மற்றும் ஊர் முக்கிய வீதிகள் வழியாக சுயம்பு சின்னம்மா ஓம்சக்தி கோவிலை அடைந்தது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமிக்கு பாலாபிஷோகம் செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர்.இதில் 20-க்கும் மேற்பட்ட கிராம பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story