வேலூருக்கு துணை ராணுவம் வருகை!

வேலூருக்கு துணை ராணுவம் வருகை!

 ராணுவம்

தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக வேலூருக்கு துணை ராணுவம் வருகை தந்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதற்கான பணிகளை வேலூர் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணப்பட்டுவாடாவை தவிர்க்க வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் வேலூருக்கு வந்தனர். கோவையில் இருந்து முதல் கட்டமாக 79 துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். அவர்கள் வேலூர் ஆயுதப்படை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அவர்கள் பணி மேற்கொள்ள உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story