சேத்துவண்டை பகுதியில் பசுபதி பிரச்சாரம்!

சேத்துவண்டை பகுதியில் பசுபதி பிரச்சாரம்!

வாக்கு சேகரிப்பு


குடியாத்தத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசுபதி பிரச்சாரம் மேற்கொண்டார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேத்துவண்டை பகுதியில் வேலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசுபதி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்பொழுது பேசிய அவர் அரசு மருத்துவராக 14 ஆண்டு காலம் பணிபுரிந்து விட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் அரசு பணியை ராஜினாமா செய்து விட்டு வந்துள்ளேன். வேலூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியாவிலேயே முதன்மை தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என வாக்குறுதி அளித்தார். அவருடன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story