அதிமுக உடன் புரட்சி பாரதம் கட்சி பேச்சுவார்த்தை

அதிமுக உடன் புரட்சி பாரதம் கட்சி பேச்சுவார்த்தை

அதிமுகவுடன் புரட்சி பாரதம் கட்சியினர் நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.


அதிமுகவுடன் புரட்சி பாரதம் கட்சியினர் நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி போட்டியிட உள்ள நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தொகுதி பங்கிட்டு குழுவுடன் புரட்சி பாரதம் கட்சியினர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர்,புரட்சி பாரதம் கட்சியின் மூத்த நிர்வாகி ரூபேந்திர குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் புரட்சியை பாரதம் அனைத்திந்திய அண்ணா திராவிட கூட்டணி இருப்பதால் கூட்டணி சார்பாக எங்களை அழைத்து பேசினார்கள்.

நாங்களும் அவருடன் உரையாடி இருக்கிறோம். திருவள்ளூர்,காஞ்சிபுரம்,விழுப்புரம் என்று மூன்று தொகுதிகள் எழுதி கொடுத்து, அதில் ஒரு தொகுதியை நாங்கள் கேட்டிருக்கின்றோம். அதில் திருவள்ளூர் தொகுதி எங்களுக்கு வேண்டும் என்று அழுத்தமாக கேட்டிருக்கின்றோம். திருவள்ளூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு எங்களுக்கு மட்டும் தான் அதனால் தான் அதனை அழுத்தி கேட்டிருக்கிறோம். எவ்வளவு கடுமையாக போட்டி இருந்தாலும் புரட்சி பாதம் கட்சிக்கு தான் வெற்றி என்று பேசினார்.

Tags

Next Story