9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை துண்டு கட்டாக காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியல் காரணமாக கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 1 சதவீதம் பார்வையற்றவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அரசு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன தேர்வில் இருந்து முழுமையாக விளக்க அளித்து உடனடியாக பட்டதாரி ஆசிரியர் பணி வழங்கிட வேண்டும். உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் ஈடுபட்டனர். சாலை மறியல் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags

Next Story