கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய அனுமதி!

கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய அனுமதி!

சசிகலா

சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டும் என கோடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து எஸ்டேட்டை ஆய்வு செய்யவும், ஆய்வின் போது நடுநிலையுடன் செயல்படவும், யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story