தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ ரூ.1500-க்கு விற்பனை

தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ ரூ.1500-க்கு விற்பனை
தோவாளையில் குவிந்த பூக்கள்
தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ ரூ.1500-க்கு விற்பனையானது.

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் மல்லிகை பூ, மஞ்சள் கிரேந்தி, பட்டரோஸ், பச்சை துளசி, சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை, அருகம்புல், கனகாம்பரம், தாமரை, அரளிப்பூ போன்றவை பூச்சந்தைக்கு வந்து பின்னர் மாநிலம், மாவட்டம் முழுவதும், கேரளாவுக்கும் விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினாலும் கடுமையான பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி மிக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு தோவாளை பூச்சந்தையில் ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 1500, மல்லிகைப்பூ ரூ.1500, அரளி ரூ.200 சேலம்அரளி ரூ. 200, சம்பங்கி ரூ.100, ரோஜா பாக்கெட் ரூ.30, பட்டர் ரோஸ் ரூ. 150, கனகாம்பரம் ரூ.500, துளசி ரூ.30, கொழுந்து ரூ.150, மஞ்சள் கிரோந்தி ரூ.90, சிவப்பு கிரோந்தி ரூ.100-க்கும் விற்பனையானது.

மேலும் மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது.

Tags

Next Story