கேட்டை திருடிய இருவர் கைது!

கேட்டை திருடிய இருவர் கைது!

கோப்பு படம்

பிக்கப் வாகனத்தில் கேட்டை திருடிச்சென்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அலக்கரை பகுதியில் மோதிலால் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இந்நிலையில் நேற்று எஸ்டேட் ஊழியர்களான புஷ்பா, வேணி ஆகியோர் தேயிலை பறித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பிக்கப் வேனில் இரும்பு கேட் இருந்தது. இதுகுறித்து தேயிலை தோட்ட ஊழியர்கள் கேள்வி கேட்டபோது வேனில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதுகுறித்து தோட்ட நிர்வாகத்தினர் வெலிங்டன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்‌. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வேனில் இருந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தியதில் கோத்தகிரியை சேர்ந்த பிரகாஷ் (30) மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அங்குராஜ் (35)என்பதும், தேயிலை தோட்டத்தில் இரும்பு கேட்டை திருடி வேனில் வைத்து கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸார் அவர்களை கைது செய்து இரும்பு கேட்டை மீட்டனர். இதன் பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story