ஈடு செய்ய முடியாத இழப்பு - பிரதமர் மோடி இரங்கல்

ஈடு செய்ய முடியாத இழப்பு - பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் மோடி - விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மறைவுக்கு பிரதமர் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவை அடுத்து பல்வேறு அரசியல் தலைவர்களும், நடிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். தமிழ் சினிமாவின் சகாப்தங்களில் ஒருவரான விஜயகாந்த் தனது சிறந்த நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அரசியல் தலைவராக பொது சேவை மற்றும் தமிழ்நாட்டின் அரசியலில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனது நெருங்கிய நண்பராகவும் கடந்த காலங்களில் அவருடனான சந்திப்புகளையும் நினைவு கூறுகிறேன். மிகுந்த வருத்தத்திற்குரிய இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story