ரயில் எஞ்சின் டிரைவருக்கு பிரதமர் மோடி அழைப்பு !

ரயில் எஞ்சின் டிரைவருக்கு பிரதமர் மோடி அழைப்பு !

மோடி - ஐஸ்வர்யா மேனன் 

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக பெண் ரெயில் என்ஜின் டிரைவர் ஐஸ்வர்யா மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 18வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து மூன்றாவது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார். பதவியேற்பு விழா டெல்லியில் ஜுன் 9ம் தேதி நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலக தலைவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் சென்னை கோட்டத்தை சேர்ந்த பெண் ரெயில் என்ஜின் டிரைவர் ஐஸ்வர்யா மேனனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரெயில்களில் இவர் பணியாற்றி வருகிறார். இதேபோல் மகாராஷ்டிராவை சேர்ந்த நாட்டின் முதல் பெண் ரெயில் என்ஜின் டிரைவரான சுரேகா யாதவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



Tags

Next Story